நிலவுடன் பேச்சு
நிலவிடம் பேச தயங்கி நிற்க
தூதாய் வந்தது வளர்பிறை நாளில்
வெளிச்சத்துடன் வெகுளியாக வந்ததை
வெறும் கண்கள் மட்டுமல்ல
மனதும் குறிப்புடன் கூறி நின்றது
இருவரின் இடையில் மின்மினி வந்தது
எம்மிரு பேச்சுக்கு இடையூறு தந்தது
இருப்பினும் நிலவின் அழகறிய
வினாவொன்று தொகுத்து கண்சிமிட்டி நிற்க
சிட்டாய் பறந்தது என்னை மண்ணித்து விடு என்று
என்னைப்போல் எத்தனை பேர் ஏமாற்றப்பட்டனர் என்றறிய ஆவல்.
கருத்துகள்
கருத்துரையிடுக