இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவள்

 அவளின் முத்தான மூன்றெழுத்தில்  முடிவிலாக் கவி பிறக்கும்  அவளிடம் பேசப் பேச  அவள் தரும் பதில் பேச்சுகள்  மனதினை சில்லு சில்லாக நொறுக்கும்  அவளிடம் முத்தங்கள் கேட்டுக் கெஞ்சி நிற்பேன்  அவள் முத்தங்கள் தராமல் தூரம் நகர்வாள்  அச்சமயம் என் நாடிகளனைத்தும் உயிரிழக்கும்  உயிரிழந்த நாடிகளை உயிர்ப்பிக்க வருவாள் அவள்  என் மேனியெங்கும் நுகர்வாள்  நிஜத்தில் இல்லை கனவில் கல்நெஞ்சக்காரி  பாலும் தேனும் கலந்த சுவையை  இல்லை அதைவிட மிகுந்த சுவையை தருவாள்  அவள் வார்த்தைகளில் அந்த அழகுக்காரி  அவள் பின் திரிந்தவர்கள் ஏராளம்  அனுதினமும் அவளுக்கு வரும் கடிதங்கள் பலநூறு  அவர்களில் ஒருவனாகப் புலம்புகிறேன்  இன்று நீ என்னிடம் இருப்பது பெரிதல்ல  என் ஆயுள் முழுவதிலும் நீ என்னுடன் இருப்பாயாக  மேலும் பலர் கடிதமேந்தி உன்னிடம் வருவார்கள்  ஹைக்கூ கவிஞரென்றும் புதுமைக் கவிஞரென்றும் மரபுக் கவிஞரென்றும்  ஒருவேளை நீ அவர்களிடத்துச் சென்றால்  என் அன்பு கைக்கிளைக்கு  இடம்பெயரும்  அப்போது நான் மடலூர்ந்தால...

விடியலுக்காய் மடியும் இனம்

 தீந்தமிழ் கேட்டுத் திகட்டிய இடம் அந்நியன் வரவால் மாறியது தடம் மூத்தோர் தந்த முக்காணி நிலம் மூடன் குரலால் முடங்கிற்று பலம் உரிமை மீட்க எழுந்தன புலிகள்  போராடிப் போராடிப் பெற்றோம் வலிகள் வீரத் தமிழச்சிகள் வில்லினை ஏந்தினர் இனத்தினை காக்க எதற்கும் துணிந்தனர் முதுகில் குத்தி வீழ்த்தினர் நம்மை நாம் பழகியதோ வீரத்தின் செம்மை அரிய ஏடுகள் தீயில் கருகின வீரமுள்ள குருதி குழிகளில் வழிந்தன அண்டையில் வீற்றுள்ள அளவிலா சொந்தங்கள்  என்னாயிற்று கேட்க நாதியில்லா பந்தங்கள்  வெள்ளையன் தந்தான் அங்கீகாரம் அவர்களிடத்தில் அண்டைச் சகோதரனுக்கோ ஆட்சி மோகம் விடியலுக்காய் மடிந்தது நம்மினம் மீட்டெடுக்கப் பாடிடு தினமொரு கானம்                                  -கவிஞர்.   பெ.சக்திவேல்