அவள்
அவளின் முத்தான மூன்றெழுத்தில் முடிவிலாக் கவி பிறக்கும் அவளிடம் பேசப் பேச அவள் தரும் பதில் பேச்சுகள் மனதினை சில்லு சில்லாக நொறுக்கும் அவளிடம் முத்தங்கள் கேட்டுக் கெஞ்சி நிற்பேன் அவள் முத்தங்கள் தராமல் தூரம் நகர்வாள் அச்சமயம் என் நாடிகளனைத்தும் உயிரிழக்கும் உயிரிழந்த நாடிகளை உயிர்ப்பிக்க வருவாள் அவள் என் மேனியெங்கும் நுகர்வாள் நிஜத்தில் இல்லை கனவில் கல்நெஞ்சக்காரி பாலும் தேனும் கலந்த சுவையை இல்லை அதைவிட மிகுந்த சுவையை தருவாள் அவள் வார்த்தைகளில் அந்த அழகுக்காரி அவள் பின் திரிந்தவர்கள் ஏராளம் அனுதினமும் அவளுக்கு வரும் கடிதங்கள் பலநூறு அவர்களில் ஒருவனாகப் புலம்புகிறேன் இன்று நீ என்னிடம் இருப்பது பெரிதல்ல என் ஆயுள் முழுவதிலும் நீ என்னுடன் இருப்பாயாக மேலும் பலர் கடிதமேந்தி உன்னிடம் வருவார்கள் ஹைக்கூ கவிஞரென்றும் புதுமைக் கவிஞரென்றும் மரபுக் கவிஞரென்றும் ஒருவேளை நீ அவர்களிடத்துச் சென்றால் என் அன்பு கைக்கிளைக்கு இடம்பெயரும் அப்போது நான் மடலூர்ந்தால...